Home செய்திகள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 230 காஸ் சிலிண்டர்கள் மீட்பு

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 230 காஸ் சிலிண்டர்கள் மீட்பு

230 காஸ் சிலிண்டர்கள் மீட்பு

230 காஸ் சிலிண்டர்கள் மீட்பு

இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் சட்டவிரோதமாக நபர் ஒருவரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 எரிவாயு நிரப்பப்பட்ட எரிவாயு உருளைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கினிகத்தேன பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிவாயு உருளைகளே காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

எரிவாயு நிரப்பப்பட்ட 230 லிட்ரோ நிறுவன சமையல் எரிவாயு உருளைகள் மறறும் 3 வெற்று எரிவாயு உருளைகளும் இதன்போது காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சமையல் எரிவாயு உருளைகளை தனது வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டசந்தேக நபரை இன்று நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version