உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களை வரவேற்க தயார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷிய இராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் கூச்சலும் குழப்பமும் நிலவி வருகிறது.
ரஷிய தாக்குதல் அச்சத்தால் கீவ் நகரைவிட்டு அவசரமாக வெளியேற ஏராளமானவா்கள் ஒரே நேரத்தில் முயன்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களை வரவேற்க தயார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.