பதில் ஜனாதிபதியாக ரணில் சத்தியப்பிரமாணம் 

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

போராட்டக்காரர்களின் கடுமையான  எதிர்ப்பையடுத்து சிங்கப்பூர் தப்பிச் சென்ற பிறகு அங்கிருந்து தமது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோட்டாபய ராஜபக்ஷ. அவரது விலகல் கடிதத்தை ஏற்பதாக அறிவித்துள்ளார் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன.

இதையடுத்து இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு முதன்மை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா பதவிப்பிரமானம் செய்துவைத்தார்.

இந்நிலையில்,இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பை எதிர்வரும் 20ம் திகதி நடத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.