ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு -அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கண்டனம்

ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நிலவும் நெருக்கடியானது அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டதே தவிர மக்களால் அல்ல என்றும், மக்கள் நீதி மற்றும் தீர்வுகளைக் கோரி வீதியில் இறங்கியுள்ளதாகவும், யாரோ ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என GMOA இன் உதவிச் செயலாளரான வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளது.

ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளது.

அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், வன்முறை மூலம் போராட்டங்களை அரசாங்கம் ஒடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளது.

உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என GMOA கேட்டுக்கொள்கிறது என்றும், பொதுமக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளது.

எப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மற்றும் பலம் பயன்படுத்தப்பட்டது என்பதையும் அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News