Home செய்திகள் மாகாண தேர்தலை நடத்த வேண்டும்! சீ. வீ. கே. வலியுறுத்து

மாகாண தேர்தலை நடத்த வேண்டும்! சீ. வீ. கே. வலியுறுத்து

மாகாண தேர்தலை நடத்த வேண்டும்
தற்போதைய நிலைமையில் நாம் பெறவேண் டியவற்றை பேசுவதற்கான ஒரு தளம் தேவை. அதற்கு மாகாண தேர்தலை நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாண அவைத் தலை வர் சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்தார்.

நேற்று யாழ் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், “என்னு டைய அனுபவத்தை பொறுத்தவரை மாகாண சபை கூடிப் பேசுவதற்கான ஒரு கட்டமைப்பு. மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். வவுனியா வடக்கு பிரதேச சபைபோல மாகாண சபையும் மாறலாம். புதிய அரசியல் யாப்பில் சில சமயங்களில் மாகாண சபையை இல்லாமல் செய்து முழுமையான ஒற்றையாட்சி யாப்பு உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப் படுகிறது.

மாகாண சபை முறைதான் தீர்வென நாங்கள் கூறவில்லை. அது ஓர் அடிப்படை. ஆனால், ஒரு சிலர் மாகாணசபையை ஆரம்பப் புள்ளியாகவே ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுகின்றார்கள். தற்போதைய நிலைமையில் நாம் பெற வேண்டியவற்றை பேசுவதற்கான ஒரு தளம் தேவை. அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சீனா கால் பதிப்பது தனது பாதுகாப்புக்கு அச் சுறுத்தலான நிலை என்பது இந்தியா வுக்கு தெரியும். அதைக் கையாள வேண்டி யது இந்திய தரப்பு. எங்களைப் பொறுத்த வரை இந்த விடயத்தை தீர்மானிக்கும் பொறுப்பில் நாங்கள் இல்லை.

சீனாவின் செயல்பாட்டில் எமக்கு உடன்பாடில்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்கின் றோம். அதற்கு மேலாக இது இரு நாடு களுடன் சம்பந்தப்பட்ட விடயம்” என்றார்.

Exit mobile version