மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடம் நடத்தப்படும்; அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா

மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடம்மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடம் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். விரைவில் தேர்தலை நடத்தி ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்துவதற்கான தளம் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின்போது இது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. தேர்தல்கள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட சில சரத்துக்களை உள்ளடக்குமாறு கோரியுள்ளன.

இந்த சந்திப்பின்போது தேர்தல் செலவினங்களைக் குறைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.