Home செய்திகள் இராஜாங்க அமைச்சர் மஸ்தானை பதவி விலகுமாறு கோரி வவுனியாவில் போராட்டம்

இராஜாங்க அமைச்சர் மஸ்தானை பதவி விலகுமாறு கோரி வவுனியாவில் போராட்டம்

அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து விட்டு

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானை பதவி விலகுமாறும், அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் எனவும் வலியுறுத்தி அவரது வவுனியா அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (28) பிற்பகல் வவுனியா, கண்டி வீதியில் அமைந்திருந்த பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய பொருளாதார மற்றும் பயிற்செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தானின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

‘ஜனாதிபதி கோட்டபாயவை  வீட்டுக்கு செல்லுமாறும், பிரதமர் மஹிந்தவை பதவி விலகுமாறும் கோரிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானை இராஜாங்க அமைச்சில் இருந்து உடனடியான இராஜினாமா செய், அரசாங்கத்தை ஆதரித்து விட்டு ஊருக்கு வராதே, மக்களின் கருத்துக் மதிபளி’  என கோசங்களை எழுப்பியதுடன், அவரது அலுவலக வேலிப் பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான சுலோக அட்டைகளையும் காட்சிப்படுத்தினர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது அப் பகுதியில் அதிகளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version