ஜி எல் பீரிஸின் உருவ பொம்மையை எரித்து யாழில் போராட்டம்

ஜி எல் பீரிஸின் உருவ பொம்மையை எரித்து யாழில் போராட்டம்

வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவபொம்மை எரித்து யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் அலுவலகத்திற்கு முன்பாக   போராட்டம் இடம்பெற்றது.

அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாக கூறி அதற்கு எதிராக நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் பேரணியாக ஜ.நா.அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்.

இதன் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ள கருத்துக்களை கண்டித்து அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் அமைச்சரின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்திய போராட்டக்காரர்கள் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கையளித்தனர்.

போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவுகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Tamil News