Tamil News
Home செய்திகள் வசந்த முதலிகேவை வி​டுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டம்

வசந்த முதலிகேவை வி​டுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சிவில் அமைப்புகளால் கொழும்பு – தும்முல்ல பகுதியில் இன்று(16) எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

150 நாட்களுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை வி​டுவிக்குமாறும் பயங்கரவாத தடைச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்குமாறும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.

இதனிடையே, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் யூனியன் ப்ளேஸ் ஊடாக காலி முகத்திடலுக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் திலின கமகேவினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

Exit mobile version