இலங்கை-மின்சாரக் கட்டண அதிகரிப்பை கண்டித்து போராட்டம்

மின்சாரக் கட்டண அதிகரிப்பை கண்டித்து போராட்டம்

மின்சாரக் கட்டண அதிகரிப்பை கண்டித்து போராட்டம்

மின்சாரக் கட்டண அதிகரிப்பை நிறுத்தக் கோரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு முன்பாக தீப் பந்தம் ஏற்றி  முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மின் பாவனையாளர்கள் சங்கம் இதனை இன்று (19) மாலை ஏற்பாடு செய்திருந்தனர். கையில் தீப்பந்தந்தை ஏற்றியவாறு கோசங்களை எழுப்பினர்.“மின் கட்டணத்தை குறை, மின் கட்டண அதிகரிப்பை நிறுத்து, உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

IMG 20220319 WA0011 இலங்கை-மின்சாரக் கட்டண அதிகரிப்பை கண்டித்து போராட்டம்

“மின் பாவனை அதிகரிப்பு டீசல் எரிபொருள் அடிக்கடி மின் வெட்டு இவ்வாறு போனால் எங்களதும் விவசாயிகளினதும் நிலை என்னவாகும். நாளாந்தம் அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றமும் சாதாரண பொது மக்கள் உட்பட அனைவரையும் பாதிக்க வைத்துள்ளது. மின்சார கட்டணத்தை குறைக்கவும் மின் கட்டண அதிகரிப்பையும்  குறைக்குமாறும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்  கருத்துரைத்தனர்