Tamil News
Home செய்திகள் இலங்கைக்கு ஜய்கா 1.3 பில்லியன் ரூபா நிதியுதவி

இலங்கைக்கு ஜய்கா 1.3 பில்லியன் ரூபா நிதியுதவி

இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் தொற்று கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்திற்காக ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு பிரதிநிதிகள் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

இதற்கமைய, சுமார் 1.3 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆவண பத்திரத்தில் நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

Exit mobile version