பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர். 

இளையோரின் பங்கேற்பு மற்றும் கல்வி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு பொதுநலவாய அமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி , டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அவர் கானா ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதோடு, இந்த நிகழ்வுக்கு இணையாக நடைபெற்ற   ‘Fireside Chat’ நிகழ்வில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

கூட்டத்தில் இளைஞர்கள் அதிகாரமளிப்பதை உறுதி செய்வதற்கான கல்வி சீர்திருத்தத்தை ஆதரிப்பதில் தலைவர்கள் அதிக பங்கு வகிக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்  என ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.