பொருளாதார நெருக்கடியினால் அரசியல் கைதிகளும் பாதிப்பு-அரசியல் கைதி தெரிவிப்பு

பொருளாதார நெருக்கடியினால் அரசியல் கைதிகளும் பாதிப்பு

பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் கைதிகளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அரசியல் கைதியொருவர் தெரிவித்துள்ளார்.

வழக்கொன்றிற்காக வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மூன்று அரசியல் கைதிகள் ஆயுதம் தாங்கிய காவலர்கள் சகிதம் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வழக்கு நிறைவின் பின்னர் அவர்களை மீண்டும் சிறைச்சாலைக்கு  வாகனத்தில் ஏற்றிக்கொண்டும் செல்லும் போது  “பொருளாதார நெருக்கடியால் அரசியல் கைதிகளும் பல் வேறான  பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதனால் தமிழ் மக்கள் அனைவரும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும்”  என்றார்.

Tamil News