தலைமன்னார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இரவு மது போதையில் சிவில் உடையில் சென்ற காவல்துறையினர் சிலர் குறித்த வீட்டை உடைத்து சேதப்படுத்தியதோடு அப்பகுதியில் உள்ள பல வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்தியதாகக் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 7 குடும்பங்கள் ஒன்றிணைந்து மன்னார் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் துறையினருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாடு இன்று புதன் மதியம் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.