Tamil News
Home செய்திகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமர் மோடி அழைப்பு

வெகுவிரைவில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழைப்பை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளார். 

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடிய இந்திய வெளிவிவகார அமைச்சர், வெகுவிரைவில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழைப்பையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.

அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன்போது குறிப்பாக இலங்கையின் வலுவான மீட்சியை முன்னிறுத்தி மேற்கொள்ளத்தக்க நடவடிக்கைகள் குறித்து இருநாட்டுத்தலைவர்களும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பர்.

Exit mobile version