Tamil News
Home செய்திகள் திருகோணமலையை பிராந்திய மையமாக மேம்படுத்த திட்டம் – இந்தியா

திருகோணமலையை பிராந்திய மையமாக மேம்படுத்த திட்டம் – இந்தியா

இந்தியாவும் இலங்கையும் திருகோணமலையை பிராந்திய மையமாக மேம்படுத்தவுள்ளதாக இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று இடம்பெற்ற இந்திய வெளிவிவகார அமைச்சின் வாராந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கையில் உள்ள திருகோணமலை நகரை ஒரு பிராந்திய மையமாக மேம்படுத்துவதற்கு இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,ஜனாதிபதி ரணில் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version