பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முற்றாக அழிக்கத் திட்டம்

இலங்கை – இந்திய உடன்பாட்டில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பல அதிகாரங்கள் அகற்றப்படவுள்ளதாக புதிய சிங்கள பௌத்த அரசின் உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகளுக்கான அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரா தெரிவித்துள்ளார்.

காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட மாட்டாது, இலங்கை இந்திய உடன்பாட்டை ஆரம்பத்திலேயே எதிர்த்தவன் நான். எனவே அதனை முற்றாக செயலிழக்கச் செய்வது நாட்டுக்கு நல்லது. அரசு தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அதற்கு பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.