Tamil News
Home செய்திகள் உள்ளூராட்சி தேர்தல் ஏற்பாடுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

உள்ளூராட்சி தேர்தல் ஏற்பாடுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பலரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு கெர்னல் (ஓய்வு) டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தர,இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஒட்டுமொத்த தேசமும் எதிர்நோக்கும் இந்த நெருக்கடியான நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்றும் பொது மக்களுக்கு மேலதிக சுமையை ஏற்படுத்துவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள், ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின்படி 2023 ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் மீது தேவையற்ற செல்வாக்கை செலுத்த முயற்சிப்பதாகவும், அரசியல் நோக்கங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களினால் சீர்குலைக்கும் காரணிகள் இருப்பதாகவும் மனுதாரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version