“அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவரிடம் கையளிப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் “அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம் இன்று (வியாழக்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள தூதரகத்தில் யாழ். இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்து  கலந்துரையாடினர்.

அதன்பின்னர் இப் பிரகடனத்தை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம் கையளித்தனர்.