கறுப்பு பட்டியலில் இருந்து நீக்குமாறு சீனாவிடம் மக்கள் வங்கி கோரிக்கை

சீனாவிடம் மக்கள் வங்கி கோரிக்கை

சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு சீனாவிடம் மக்கள் வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

கடன்பத்திரத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக சீன துாதரகத்திற்கு அறிவித்தே மக்கள் வங்கி தன்னை கறுப்பு பட்டியலில் இருந்து விடுவிக்குமாறு சீன தூதரகத்துக்கு தாம் அறிவித்துள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

எனவே,  இன்று குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும்  மக்கள் வங்கி குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக ஒப்பந்தத்தை மீறி கடன் சான்றுப் பத்திரத்துக்கான கொடுப்பனவை செலுத்தியமையால் மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைப்பதாக  இலங்கைக்கான  சீனத் துாதரகம் கடந்த 2021ம் ஆண்டு ஒக்டோபர் 29ம் திகதி அறிவித்திருந்தது.

சீனத் துாதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகத்தினால் கறுப்புப் பட்டியல் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சீனத்துாதரகம் அப்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.