Tamil News
Home செய்திகள் கிளிநொச்சியில் தமது சொந்தக் காணிகளை பெற்றுத் தரக் கோரி மக்கள் போராட்டம்

கிளிநொச்சியில் தமது சொந்தக் காணிகளை பெற்றுத் தரக் கோரி மக்கள் போராட்டம்

கிளிநொச்சி பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்திற்கான காணியில் 20 ஏக்கர் காணியினை பெற்றுத்தர வேண்டும் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

இன்று காலை 10 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் குறித்த இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் காணியில் 20 ஏக்கர் காணியினை தமக்கு பெற்றுத்தர கோரிக்கை விடுத்தனர்

மேலும் அப்பகுதியில் 153 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், தமக்கேன 1/4 ஏக்கர் காணியினை பெற்றுத்தரும்படியும் கேட்டுக்கொண்டனர்.

எந்தவித முன்னறிவித்தலும் இன்று இரவோடு இரவாக இரசாயன கூட்டுத்தாபனத்தினர் வேலி அமைத்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்டோர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

Exit mobile version