வவுனியா: வனவளத் திணைக்களத்தினரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

வனவளத் திணைக்களத்தினருக்கு எதிர்ப்பு

வனவளத் திணைக்களத்தினருக்கு எதிர்ப்பு

வவுனியா: கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வனவள திணைக்களத்தினர் வேலி போட்டு அடைப்பதாக தெரிவித்து மதுராநகர் மற்றும் இத்திக்குளம் பொதுமக்கள் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா மதுராநகர் கிராமத்தின் பின்புறமாக உள்ள வனவள திணைக்களத்தினருக் குரிய காணியில், அதே பகுதியில் உள்ள 6 கிராமங்களை சேர்ந்த மக்களின் கால்நடைகள் மேச்சலுக்காக சென்றுவரும் நிலையில், கடந்த சில நாட்களாக வனவளத் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்குள் கால்நடைகள் வருவதை தடை செய்யும் வகையில் வேலி அமைத்து கால்நடை வளர்ப்பாளர்களையும் அச்சுறுத்தி வந்துள்ளனர்.

வனவளத் திணைக்களத்தினருக்கு எதிர்ப்பு

இதன் காரணமாக தமது கால்நடைகளுக்கு உணவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதிக்குள் காணப்படும் குளத்திலேயே கால்நடைகள் நீரை பருகுவதால் தற்போது அதுவும் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்  கால்நடைகளை மேய்ப்பதற்கான இடத்தினை வேலி போட்டு அடைப்பதனை வனவளத்திணைக்களத்தினர் நிறுத்த வேண்டும் எனவும்  அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இத்திக்குளம் காட்டு அம்மன் ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் 6 கிராமங்களை சேர்ந்த மக்கள், தமது 2000 கால்நடைகளின் மேச்சல் தரை இல்லாமல் போவதாகவும் தாம் கால்நடை வளர்ப்பை கைவிட்டு கிராமத்தினை விட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

வனவளத் திணைக்களத்தினருக்கு எதிர்ப்பு

இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கு. திலீபனிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது பிரச்சனைகளை தெரிவித்தததையடுத்து குறித்த பகுதிக்கு வனவள திணைக்களத்தினரை வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் பணித்திருந்தார்.

இதனையடுத்து அங்கு வந்த வனவளத்திணைக்களத்தினரிடம் குறித்த வேலி அமைக்கும் பணியை தற்காலிகமாக கைவிடுமாறும் மக்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கு தடை ஏற்படுத்த வேண்டாம் எனவும்  வலியுத்தினார்.

DSC02759 1 வவுனியா: வனவளத் திணைக்களத்தினரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

எனினும் வனவள திணைக்களத்தினர் குறித்த பகுதியில் வனம் உருவாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து எதிர்வரும் புதன்கிழமை அரசாங்க அதிபர் தலைமையில் வனவளத்திணைக்களத்தினர் கிராம மக்களைச் சந்தித்து குறித்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் அதுவரை வனவளத் திணைக்களத்தினர் பொதுமக்கள் கால்நடைகளை குறித்த பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல அனுமதிக்குமாறு தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட வனவளத் திணைக்களத்தினர், அக்கிராம மக்களின் கால் நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிப்பதாக தெரிவித்துள்ளனர்.