கொரோனா விடயத்தில் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் – இம்ரான் மஹ்ரூப்  சாடல்

IMG 20210819 WA0014 1 கொரோனா விடயத்தில் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் - இம்ரான் மஹ்ரூப்  சாடல்

‘கொரோனாவிலிருந்து அரசு மக்களைப் பாதுகாக்கும் என்ற விடயத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இதனால் தாமே சில முடிவுகளை எடுத்து வருகின்றனர்’ என திருகோணமலை மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

“கொரோனா நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகின்றது. நாளாந்தம் தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கையும் மரணமடைவோர் எண்ணிக்கையும் மிக அதிகரித்து வருகின்றது. வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் வைத்திய வசதிக்காக அல்லல் படுகின்றனர்.

இதனைக் கவனத்தில் கொண்டு வைத்தியர்களும் ஏனைய சுகாதாரப் பகுதியினரும்  “சில நாட்களுக்காவது நாடு முடக்கப்பட வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்றையும் கொரோனா மரணங்களையும் குறைக்க முடியும்” என்று அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

எனினும் இவைகளை அரசு காதில் போட்டுக் கொள்ள வில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவும் இல்லை. அதற்கான திட்டங்களும் அரசிடம் இல்லை. இதுவே கொரோனா தொற்று அதிகரிப்புக்கும் கொரோனா மரண அதிகரிப்புக்கும் காரணமாகும்.

எனவே இந்த அரசு மக்களைப் பாதுகாக்கும் விடயத்தில் மிகவும் பலவீனமாக உள்ளது என்பதை உணர்ந்த மக்கள் அரசில் நம்பிக்கை இழந்து விட்டனர். இதனால் ஆங்காங்கே பிரதேச ரீதியாக மக்கள் ஒன்றிணைந்து தத்தமது பகுதிகளில் சுய முடக்கத்தை பிரகடனப்படுத்தி வருகின்றனர்”என்றார்.

ilakku-weekly-epaper-143-august-15-2021