வவுனியா பிரதேச செயலகத்தின் சர்வாதிகார போக்கால் மக்கள் பாதிப்பு

பிரதேச செயலகத்தின் சர்வாதிகார போக்கால் மக்கள் பாதிப்பு


வவுனியா பிரதேச செயலகம் தடுப்பூசி அட்டையுள்ளவர்களே பிரதேச செயலகத்திற்குள் நுழைய முடியும் என்ற பிரதேச செயலகத்தின் சர்வாதிகார போக்கால் மக்கள் பாதிப்புக்கு முகம் கொடுத்துள்ளனர். 

நாடளாவிய ரீதியில் தடுப்பூசி அட்டை பரிசோதனை முறை நடைமுறைப் படுத்தப்படாத நிலையில் சுகாதார அமைச்சு குறித்த செயற் திட்டத்தினை நடைமுறைப்படுத்த இதுவரை தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் எந்த அரச திணைக்களத்திலும் இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத செயற்பாடான கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனையை வவுனியா பிரதேச செயலகம் செயற்படுத்துவதற்கு முனைந்துள்ளமை மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

தன்னிச்சையாக சர்வாதிகார போக்குடன் இத்திட்டத்தை திடீரென முன்னெடுத் துள்ளமையால் நாடு முடக்கத்தினால் தமது பணிகளை செயற்படுத்த முடியாதிருந்த பொது மக்கள் தற்போதும் தமது தேவைகளை பிரதேச செயலகத்தில் முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ilakku-weekly-epaper-150-october-03-2021