Tamil News
Home செய்திகள் சாந்தனுக்கு கடவுச் சீட்டு அனுப்பப்பட்டது – விரைவில் இலங்கை திரும்ப வாய்ப்பு

சாந்தனுக்கு கடவுச் சீட்டு அனுப்பப்பட்டது – விரைவில் இலங்கை திரும்ப வாய்ப்பு

சாந்தனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, அவருக்குரிய கடவுச்சீட்டு தேவைப்பட்ட நிலையில், இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக அவருக்குரிய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சால் அறியத்தரப்பட்டுள்ளது.

இதன்படி, சாந்தன் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் வரும் நாட்களில் இந்திய அரசு தரப்பினால் மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிகின்றது.

Exit mobile version