பாகிஸ்தான் உலங்குவானுர்தி விபத்து-இராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு

பாகிஸ்தான் இராணுவத்துக்கு சொந்தமான உலங்குவானுர்தியில் பயணித்த, லெப்டினன்ட் ஜெனரல், இராணுவ அதிகாரிகள் உட்பட 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.  

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்ததாக பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளரின் அலுவல்பூர்வ ட்விட்டரில் தெரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.