Tamil News
Home செய்திகள் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு ஜனாதிபதி ரணில் பயணம்

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு ஜனாதிபதி ரணில் பயணம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ. கே 649 என்ற விமானத்தினூடாக இன்று அதிகாலை ஜனாதிபதி நாட்டில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்டுகிறது.

டுபாய்க்கு சென்று அங்கிருந்து, மற்றொரு விமானத்தின் ஊடாக பிரித்தானியா நோக்கி ஜனாதிபதி பயணிக்கவுள்ளார். பிரான்ஸுக்கான விஜயத்தின் போது, புதிய பூகோள நிதியுதவி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

Exit mobile version