தமது பிரச்சினைகளைத் தீர்க்க கோரி தாதிய உத்தியோகத்தர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டம்

பணிப் புறக்கணிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று (27) அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

குறிப்பாக அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா கால விசேட கொடுப்பனவான 7500 ரூபாயினை உடனடியாக வழங்குதல், விசேட விடுமுறை நாட்களில் கடமைக்கு சமுகமளித்தால் அதற்கான கொடுப்பனவை வழங்கல், மற்றும் தாதிய உத்தியோகர்களுக்கான கொரோனா கால பாதுகாப்பு அங்கிகள் மற்றும் முகக்கவசங்கள் போன்றவற்றை உடனடியாக வழங்குமாறு கோரி குறித்த பணிபகிஸ்கரிப்பு போராட்டம் இடம்பெற்றது.

காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய பகிஸ்கரிப்பு போராட்டம் மதியம் 12 மணிவரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவசர நோயாளர்களிற்கான உயிர்காப்பு சிகிச்சைகள் அனைத்தும் வழமைபோல இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எமது கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவிசாய்க்காது விடின் தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுப்போம் என தாதிய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021