இலங்கை : ‘பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் போன்ற விடயங்களில் போதியவு முன்னேற்றமில்லை’ – நோர்வே

பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் போன்ற விடயங்களில்

இலங்கையில் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் போன்ற விடயங்களில் போதியவு முன்னேற்றமில்லாதது குறித்து கவலையடைந்துள்ளோம் என ஐ.நா மனித உரிமை பேரவையில் உரையாற்றுகையில் நோர்வே தெரிவித்துள்ளது.

சிவில் சமூகத்தினர் மீதான கண்காணிப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை இலங்கை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்றும் கூறியுள்ளது.

அதே நேரம் காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகம் காணாமல் போனவர்கள் குறித்து மிகவும் மந்த கதியில் விசாரணைகளை முன்னெடுப்பது குறித்து பிரிட்டன் கவலை வெளியிடடுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்திற்கான உத்தேச திருத்தங்கள் மிகவும் மட்டுப்படுத்தப் பட்டவை நீண்டகால கரிசனைகள் தொடர்ந்தும் நீடிக்கின்றன என பிரிட்டன் தெரிவித்துள்ளது.