பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கான திருத்தங்கள் மீது நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையின் போதே மேற்கண்டவாறு அவர் கூறினார். அவர் மேலும் தெரிவித்த தாவது:-
ஒருவரின் வாக்கு மூலம் ஏற்றுக் கொள்ளப்படும் நிலை இருப்பதனால்தான் பொலிஸ் சித்திரவதை மோசமாக உள்ளது. அடித்து துன்புறுத்தி வாக்கு மூலத்தைப் பெற்று வழ க்கை முடிப்பதில் பொலிஸ் மும்முரமாக உள்ளதால் உண்மையான துப்பறியும் திறன் கூட பொலிஸாரிடம் இல்லாது போய் விட்டது.
நீங்களே நியமித்த பரணகம ஆணைக் குழு, உடலகம் ஆணைக் குழு, நல்லிணக்க ஆணைக் குழு ஆகியன ஒத்துக் கொண்டுள்ளன இராணுவத்திடம் சரணடைந்த ஆயி ரக் கணக்கானோர் காணாமல் போயினர் என இதுவரை ஒருவரையாவது கண்டு பிடி த்தீர்களா? அல்லது அதற்குக் காரணமான ஒருவரையாவது சட்டத்தின் முன் நிறுத் தினீர்களா?
உயர் கடற்படை அதிகாரிகளால் கப்பத்துக்காக 11 பேர் காணாமல் ஆக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட நீதிவா ன்களுக்கு இந்தச் சட்டம் இடமளிப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால், அதனை நடை முறைப்படுத்த எதுவித ஏற்பாடும் இங்கு செய்யப் படவில்லை. சமர்ப்பிக்கப் பட்டுள்ள திருத்தச் சட்டங்கள் வெறுமனே கண் துடைப்புக்களே.