யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பேரணியில் அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.
இன்று காலை 10:30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பு ஆரம்பமாகும் இந்தப் பேரணில் இலங்கை ஜனாதிபதிக்கான மகஜரை வடக்கு மாகாண ஆளுநர் ஊடாகவும், இந்தியப் பிரதமருக்கான மகஜரை இந்தியத் துணைத் தூதுவர் ஊடாகவும் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.