வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு ரஷ்யா மீண்டும் முன்வந்த நிலையில், தங்களுக்குத் தேவையில்லை என வடகொரியா நிராகரித்துள்ளது.
வடகொரிய மக்கள் பசியால் வாடுவதாகவும், கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த நிராகரிப்பு செய்தி வெளியாகி இருக்கிறது.
வடகொரிய மக்கள் பசியால் வாடுவதாகவும், கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
அதே நேரம் வடகொரியாவில் உணவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்தார். இந்த நிலையில் வடகொரியாவுக்கு தடுப்பூசி வழங்கத் தயாராக இருப்பதாக கிம் ஜோங் உன்வின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் மீண்டும் கூறியிருக்கிறார்.
ஆனால் தங்களது நாட்டில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என வடகொரியா அறிவித்துள்ளது.