வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்களால் நீதி வேண்டி இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில், தமது உறவுகளை தொலைத்த உறவுகள் கலந்து கொண்டு இலங்கை மற்றும் சர்வதேசத்திடம் நீதி வேண்டி கோசமெழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.