நிரோஷை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு

நிரோஷை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு

நீதிமன்ற  வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை திங்கட்கிழமை (22.11.2021) காலை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் கட்டளை, அச்சுவேலி காவல்துறையினரால் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நாள் தொடர்பில் நீதிமன்றங்களினால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், மாவீரர் நாள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டே இவ் அழைப்புக்கட்டளை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவீரர் நாள் மற்றும் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல்களில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரின் நினைவேந்தல் சுதந்திரத்திற்கு எதிராக காவல்துறையினர் வழக்குகளைத் தாக்கல் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இம் முறை உப தவிசாளர் கபிலனின் பெயரும் இவ் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad நிரோஷை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு