சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல்

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ்


சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் புதிய வகை வைரஸ் பரவியிருக்கலாம் என  அஞ்சப்படுகின்றது.

இந்நிலையில், சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ள லான்சோ நகர் பிறபகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், கொரோனா பரவல் சீனாவில் பரவ தொடங்கியது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் வேற்றுருவாக்கம் அடைந்து, முதல் அலை, இரண்டாம் அலை என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும்  கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சுற்றலா தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பான எந்த தகவலையும்  சீனா வெளியிடவில்லை.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல்