சந்திரிகாவை மையமாக வைத்து உருவாகின்றது புதிய கூட்டணி!

உருவாகின்றது புதிய கூட்டணி

உருவாகின்றது புதிய கூட்டணி: தென்னிலங்கை அரசியல் களத்தில் புதிய அரசியல் அணியொன்று எதிர் வரும் மார்ச்சில் ஐந்தாம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அரசியல் அணியில் மையப்புள்ளியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க இருப்பார். அத்துடன், குமாரவெல்கம, அர்ஜூன ரணதுங்க, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் இதில் இணைய வுள்ளனர்.

இந்த அணி குமார வெல்கம தலைமையில் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சியான புதிய லங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்தி பரந்து பட்ட கூட்டணி ஒன்றை அமைக்கும் வகையில் செயல்படவுள்ளது. இது தொடர்பில் குமார வெல்கம கூறுகையில், “எமது கட்சியின் தலைமைக் காரியாலயத்தை எதிர்வரும் மார்ச் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் திறப் பதற்கு தீர்மானித்துள்ளோம்.

குறித்த நிகழ்வில் எமது கட்சியை மையப்படுத் திய பரந்து பட்ட அணியொன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். ஜனநாயகம், மனிதாபிமான பண்புகள் நிறைந்த அரசியல் கலாசாரம் ஒன்றையும் அனைவரும் சமத்துவமாக வாழும் அமைதியான சூழல் ஒன்றையும் கட்டி யெழுப்புவதற்கு சமூகத்தை வழிநடத் தக்கூடிய அரசியல் கட்சியொன்று அவசியமாகின்றது.

அந்த வெற்றிடத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காகவே இப்புதிய அரசியல் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானித்துள்ளோம். இந்தக் கட்சியின் போசகராகவும் எம்மை வழிநடத்துபவராகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க செயல்படவுள்ளார்.

அத்துடன், அவருடைய வழிகாட்டலில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கி நகரவுள்ளோம். இந்த நிகழ்விற்கு அனைத்து தலைவர் களையும் அழைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். மேலும், எமது கொள்கைகளையும், இலக்குகளையும் ஏற்றுக் கொள்பவர்கள் எம்முடன் இணைந்து பயணிப்பதற்கு முடியும். அவ்விதமானவர் களுக்காக எமது கதவுகள் திறந்தே இருக்கும். அண் மையில் சுசில் பிரேமஜயந்தவுடனும் பேச்சு மேற்கொண்டுள்ளேன். அதேநேரம், ஏனைய தலைவர்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதில் எமக்கு தயக்கங் கள் இல்லை” என்றார்.

Tamil News