65,000 மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு உடனடியாக அனுப்ப இந்தியா தீர்மானம்

65,000 மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு உடனடியாக அனுப்ப இந்தியா எடுத்துள்ள தீர்மானத்துக்கு டெல்லியிலுள்ள இலங்கை தூதர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலுள்ள 2.2 கோடி மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வருகின்ற நிலையில், ஆண்டுதோறும் 40 கோடி அமெரிக்க டாலருக்கு இலங்கை உரங்களை இறக்குமதி செய்துவந்தது.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானத்துக்கமைய கடந்த ஆண்டு ரசாயன உரங்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

போதிய அளவில் இயற்கை உரங்கள் கிடைக்காததாலும் மோசமான வானிலையாலும், நெல், தேயிலை போன்றவற்றின் உற்பத்தியும் இலங்கையில் வெகுவாக குறைந்தது. இதுவும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம்.

உரத்துறை செயலாளர் சதுர்வேதியை அண்மையில் சந்தித்து பேசிய மிலிந்த மொரகொட, இலங்கையில் பெரும்போக விவசாயத்துக்கான யூரியாவை விநியோகம் செய்வது தொடர்பாக நடத்திய ஆலோசனையை அடுத்தே இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

Tamil News