பிரேசில் அதிபருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்

நாடு முழுவதும் போராட்டம்


பிரேசில் அதிபருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரூவுக்கு எதிராக அந்நாடு முழுவதும்  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

நேற்று 160க்கும் மேற்பட்ட நகரங்களில், அந்நாட்டின் அதிபர் சயீர் போல்சனாரூவை  பதவி நீக்க வலியுறுத்தி மக்கள் இந்த போராட்டங்களில் ஈடுபட்டனர். இப்போராட்டங்களை பிரேசில் எதிர்கட்சிகளும், வணிகர் சங்கங்களும் இணைந்து நடத்தியுள்ளன.

அந்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் சயீர் போல்சனாரோ தற்போது பின்தங்கியுள்ளார்.

பிரேசிலில் இதுவரை ஆறு இலட்சத்துக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், அதிபர் சயீர் போல்சனாரூ, கொரோனா வைரஸ் பெருந்தொற்று பிரச்சனையை சரியாக சமாளிக்கவில்லை என்கிற அதிருப்தியில் மக்கள் இருக்கின்றனர். “இந்த அதிபர் உலகின் பிற்போக்குத்தனமான எல்லா விஷயங்களையும் பிரதிபலிக்கிறார். இங்கு பசி, வறுமை, ஊழல் என எல்லாமே இருக்கின்றன. நாங்கள் ஜனநாயகத்தைக் காக்க இங்கு கூடியுள்ளோம்” என  போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021