நல்லூர் திருவிழா ;50 பேருக்கு மட்டுமே அனுமதி

எதிர்வரும் 25 ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நல்லூர் திருவிழாவில் கோவிலுக்குள் செல்வதற்கு 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் காவடி, தூக்குக்காவடி, அங்கப்பிரதட்சணம் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும், தண்ணீர் பந்தல் மற்றும் அன்னதானம் போன்ற நிகழ்வகளுக்கும் அனுமதியில்லை எனவும் இந்த முடிவு கோவிட்-19 நோயினால் ஏற்பட்டுள்ள நிலமையை கருத்தில் கொண்டு சுகாதார விதிகளுக்கு அமைவாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.