எனது அன்பு பூமியின் மிகவும் அழகான இலங்கை தேசத்திற்கானது-எரிக்சொல்ஹெய்ம்

எனது அன்பு ஒரு தலைவருக்கானது இல்லை. பூமியின் மிகவும் அழகான தீவான இலங்கை தேசத்திற்கானது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக பல வருட சமாதான பேச்சுவார்த்தைகளின் மூலமாக நான் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமாக உறவை வளர்த்துக்கொண்டேன் ஆனால் பலர் கருதுவதற்கு மாறாக ஏனைய இலங்கை அரசியல்வாதிகள் பலருடன் எனக்கு சிறந்த உறவு உள்ளது.

நான் மகிந்த ராஜபக்சவை சந்தித்தேன். பரஸ்பரம் இருவரும் ஆரத்தழுவிக்கொண்டோம். சம்பந்தன் சுமந்திரன் போன்ற பல தமிழ்தலைவர்களை எனக்கு தெரியும், ஆகவே எனது அன்பு ஒரு தலைவருக்கானது இல்லை. பூமியின் மிகவும் அழகான தீவான இலங்கை தேசத்திற்கானது .

என்னால் உதவிவழங்க முடியுமா என ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார் என்னையும் மாலைதீவின் முகமட் நசீட்டையும் அவர் கேட்டுக்கொண்டார் என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.