ஆரியகுளத்தில் மத உரிமையை மீறும் அதிகாரம் மாநகர சபைக்கு கிடையாது! யாழ் மாநகர ஆணையாளருக்கு ஆளுநர் காட்டமாக கடிதம்

அதிகாரம் மாநகர சபைக்கு கிடையாது
“யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தில் பொது மக்களின் மத உரிமையை மீறும் வகையில் செயல்படும் அதிகாரம் மாநகர சபைக்கு கிடையாது” என்று யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் தனியார் நிதிப் பங்களிப்புடன் ஆரிய குளம் அழகுபடுத்தப்பட்டு, பொழுது போக்கு திடலாகப் பொது மக்களின் பாவனைக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.

ஆரியகுளத் திருத்தப் பணிகளின்போது மத சின்னங்களை நிறுவுவது தொடர்பில் இழுபறிநிலை தோன்றியிருந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு எந்த மதத்தின் அடை யாளத்தையும் பிரதிபலிக்கும் வகையி லான கட்டமைப்பையும் அமைப்ப தில்லை என்று மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த நிலையில், வடக்கு ஆளுநர் அனுப்பி வைத்த கடிதத்தில் அரசமைப் பின்படி மத அனுட்டானங்களை தடுக் கும் அதிகாரம் மாநகர சபைக்கு கிடை யாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், ஆரியகுளம் மாநகர சபை யின் ஆளுகைக்கு உட்பட்டதுதான் என் பதை உறுதிப்படுத்தும் வகையில் உரித்து ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் மாநகர ஆணையாளரைப் பணித்திருக்கி றார்.

மேலும், சமயத்தைப் பின்பற்றும் உரிமை தொடர்பில் மாநகர சபை உறுப் பினர்களுக்கு மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் தன்னைச் சந்திப்பதற்கு ஆலோசனை வழங்குமாறும் அந்தக் கடி தத்தில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Tamil News