முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்-யாழ். பல்கலையில் அஞ்சலி

மே 18 நினைவு தினத்திற்கான பேரணி

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் மே 18 நினைவு தினத்திற்கான பேரணி இன்று வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பின் யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு வந்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த  அஞ்சலி நிகழ்வில் முதன்முறையாக யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்குபற்றியமை சிறப்பம்சமாகும்.

Tamil News