இந்தியப் பிரதமர் மோடியின் ஆதரவு எனக்குண்டு-இரா.சம்பந்தன்

தமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச சமூகம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முழுமையாக பின்னால் நிற்கின்றார்.

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு நாட்களில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீதியான, சமத்துவமான, கௌரவத்துடன் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என கலந்துரையாடினார்.

அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு சென்றபோது இந்தச் செய்தி அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறதுஎன இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.