பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் பிரதமரும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவும் கொழும்பில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரது இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
ஆனால் இந்த சந்திப்பானது திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில், அந்த சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்தார் என்றும், இந்த சந்திப்பின் போது, சமகால அரசியல் விடயங்கள் குறித்து ஆராயப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியு உள்ளன.