இலங்கை விமானப்படைத் தளபதி மற்றும் அமெரிக்கத் தூதரிடையே சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங், இலங்கை விமானப்படைத் தளபதியான சுதர்சன பத்திரனவை இன்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்து -பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கு வலுவான, பாதுகாப்பான இலங்கை முக்கியமானது என்று தூதுவர் ட்வீட் செய்துள்ளார்.

பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் இலங்கை பாதுகாப்பிற்கான தற்போதைய அர்ப்பணிப்பு தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

Tamil News