Tamil News
Home செய்திகள் யாழ்ப்பாணம்,வவுனியா மற்றும் மல்லாவியில் மே நாள் நிகழ்வு

யாழ்ப்பாணம்,வவுனியா மற்றும் மல்லாவியில் மே நாள் நிகழ்வு

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் தமிழ் தேசிய தொழிலாளர் தினம் மல்லாவியில்  இடம்பெற்றது.

மல்லாவி நகரின் அனிஞ்சியன்குளம் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான மேதின ஊர்தி பவனி மல்லாவி நகரின் ஊடாக மல்லாவி சிவன் ஆலய வளாகத்தை அடைந்து அங்கு மேதின கூட்டம் இடம்பெற்றது

குறித்த மேதின ஊர்தி பவனியில் நில ஆக்கிரமிப்பு மற்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு என்பவற்றுக் கெதிராக அடையாளங்களை தாங்கிய ஊர்தியுடன் மக்கள் வருகை தந்தனர்.

மேலும் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தமிழர் கடல்,நில வளங்களை சுரண்டாதே, இந்த மண் எங்களின் சொந்த மண் போன்ற கோசங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்

 குறித்த பேரணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்

யாழில் மே தின ஊர்வலம்

வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தில் வாகன ஊர்வலமொன்று யாழ்.நகரில் நடைபெற்றது.

புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் பிரதான மேதினக்கூட்டமும், ஊர்வலமும் வவுனியாவில் இன்று(01) காலை இடம்பெற்றது.

ஊர்வலத்தின் போது விலையேற்றத்தைக் கண்டித்தும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் செயற்பாட்டை கண்டித்தும் கோசங்கள் எழுப்பபட்டதுடன், ஐஎம்எப்  உடன்படிக்கை சித்தரிக்கும் ஊர்தியும் ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது.

Exit mobile version