Home செய்திகள் வவுனியா:சிங்கள குடியேற்றத்துக்கு எதிராக மாபெரும் போராட்டம்

வவுனியா:சிங்கள குடியேற்றத்துக்கு எதிராக மாபெரும் போராட்டம்

சிங்கள குடியேற்றத்துக்கு எதிராக மாபெரும் போராட்ட

வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (15) காலை  மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு எதிராக மாபெரும் போராட்டமானது மக்கள் போராட்ட குழு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,

எங்கள் நிலம் எமக்கு வேண்டும், தொல்பொருட்திணைக்களமே வரலாற்றை திரிபுபடுத்தாதே, அதிகார இனவெறியை தமிழர்கள்மீது காட்டாதே, சிங்கள குடியேற்றத்தை நிறுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதேவேளை ஜனாதிபதிக்கு அனுப்பும் நிமித்தம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, பிரதேசசபை தலைவர்களான ச.தணிகாசலம், யோகராசா, நகரசபை தலைவர் இ.கௌதமன், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசகட்சியின் நி.பிரதீபன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், ம.தியாகராஜா உட்பட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version