ஆசிரியர், அதிபர் தொழிற் சங்கத்தினரால் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

IMG 4230 ஆசிரியர், அதிபர் தொழிற் சங்கத்தினரால் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிஅதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை உடனடியாக தீர்க்குமாறு கோரி அதிபர் ஆசிரியர் தொழிற் சங்கத்தினரால் மாபெரும் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப் பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த பேரணி அங்கிருந்து மணிக்கூட்டு சந்தியை அடைந்து மீண்டும் பழைய பேருந்து நிலையப் பகுதியை அடைந்தது. ஆர்பாட்டத்தில் பெருமளவான அதிபர் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அவர்கள். ஆசிரியர்களின் சம்பள முரன்பாடுகளை தீர்ப்பதாக அரசாங்கம் சொல்லிக் கொண்டாலும் அதனை தீர்ப்பதற்கான எந்தவித நடவடிக்கை யினையும் அரசு இதுவரை முன்னெடுக்கவில்லை. இதனால் எமது வாழ்க்கைச் செலவு மிகவும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. அத்துடன் கல்விக்கு 6 வீதம் நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

IMG 4226 ஆசிரியர், அதிபர் தொழிற் சங்கத்தினரால் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

இதேவேளை ஜோன் கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக சட்டமானது கல்வித் துறையில் இராணுவத் தலையீடுகளை ஏற்படுத்துகின்ற அபாய நிலையை ஏற்படுத்தியுள்ளது. அது உடனடியாக நிறுத்தப் படுவதுடன், கல்வியினை தனியார் மயப்படுத்துவதை நிறுத்துமாறும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆசிரியர் உழைப்பை சுரண்டாதே, தரமான இலவச கல்வியினை விற்காதே, கொத்தலாவலை சட்டமூலத்தை கிழித்தெறி போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021