மன்னார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் தஞ்சம்

மன்னார் பேசாலையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இன்று (17) காலை  தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

குறித்த ஆறு தமிழர்களையும் மணல் திட்டில் இருந்து பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் இராமேஸ்வரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலையை  சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி, புலக்ஷன், கணுவியா, சசிக்குமார், சனுஜன், அந்தோணி பெர்ணான்டோ உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6  பேரே இவ்வாறு தமிழகம் சென்றுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக  மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது வரையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.