மாவீரர் தின புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட நபர் மன்னாரில் கைது

புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட நபர்

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முகநூலில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாக தெரிவித்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார்  காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.